என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு ஊழியர்கள்"
- அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
- சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தவேண்டும் அகவிலைப்படி உடனே வழங்கப்பட வேண்டும், நகராட்சி நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமல்படுத்திட வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்தம் தினக்கூலி அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர் புற நூலகர்கள், உள்ளிட்ட தொகுப்பூதியம் ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். கருவூலம் உள்ளிட்ட அரசுத்துறை மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் வட்டார கிளை தலைவர் பாண்டியம்மாள் செயலாளர், ஆறுச்சாமி, மற்றும் சத்துணவு ஊழியர் சங்க முருகேசன், மற்றும் பாக்கியம், விஜயகுமார், நாராயணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட நிர்வாகி மாலா தலைமை தாங்கினார்.
வட்டாரத்தலைவர் பேபி, செயலாளர் செல்வி, மாவட்ட நிர்வாகி கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பொறுப்பாளர் இளங்கோவன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பொருளாளர் கஸ்தூரி நன்றி கூறினார்.
- அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பல்லடம் வட்டக் கிளையின் 15 -வது பேரவைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு அகவிலைப்படி ஊதியத்துடன் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், வட்ட கிளைச் செயலாளா் ஆறுச்சாமி, பொருளாளா் ஜெயகுமாரி, மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தலைவா் ராணி, மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
- அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடை பயணம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.
மதுரை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3 நாள் நடை பயண பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரை கள்ளிக்குடி உதவி கல்வி அலுவலர் அலுவ கத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், சரவணன் ஆகியோர் தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபயண பேரணி தொடங்குகிறது. அங்கிருந்து திருமங்கலம் நெடுஞ்சாலை துறை வளாகம், ஊராட்சி அலு வலகம் வழியாக ராஜாஜி சிலையில் முடிகிறது.
திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் 16-ந் தேதி தொடங்கும் பேரணி பசுமலை பஸ் நிறுத்தம், பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை அலுவலகம், காளவாசல் பி.ஆர்.சி. டெப்போ வழியாக எல்லீஸ் நகர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில் முடிகிறது.
மதுரை அரசு பாலி டெக்னிக் வளாகத்தில் 17-ந் தேதி தொடங்கும் நடை பயண பேரணி சம்பள கணக்கு அலுவலகம், திருமலை நாயக்கர் மகால், செல்லூர் கல்லூரி கல்வி அலுவலகம், தல்லாகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், தாமரைத் தொட்டி நெடுஞ்சாலை துறை அலுவலகம், ராஜா முத்தையா மன்றம் வழியாக மாலை 5.45 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தை வந்தடைகிறது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மதுரை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டு உள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்,
அமைச்சுப் பணியாளர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கும் ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்,
தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி-நகராட்சி பகுதியில் ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பில் பாரபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர், தூய்மைக் காவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மாரியப்பன், நடராஜன், ஜெயராஜராஜேஸ்வரன், 'டான்சாக்' மனோகரன், பரஞ்ஜோதி, மணிகன்டன், சின்னபொன்னு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்ப ல்லோ மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட முகாமில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தினர் அனைவரும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தின உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
- விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்